திராவிட நாட்டுக்கு ராணுவமாக மகிழ்மதியின் படைவீரர்கள் போதாதா... அடடே!
திராவிட நாட கோரும் முழக்கத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
சென்னை: மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடைவிதித்ததைக் கண்டித்து தென் மாநிலங்கள் தனி நாடு கோஷத்தை முன் வைக்க தொடங்கியுள்ளனர். டிவிட்டரில் டிரென்டாகியுள்ள திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
சினிமா பட டயலாக்குகளுடன் நெட்டிசன்கள் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திராவிட நாடு குறித்த .பேச்சுதான் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
திராவிட நாடு குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
மகிழ்மதியின் படைவீரர்கள் போதாதா?
திராவிட நாட்டுக்கு ராணுவமாக மகிழ்மதியின் படைவீரர்கள் போதாதா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..
|
தகிடத் தகிட..
தகிடத் தகிட.. என மாட்டிறைச்சிக்கு எதிர்பு கிளம்பியுள்ளதை குறிப்பிடுகிறார் இந்த நெட்டிசன்..
|
இந்துத்துவத்தை நிறுத்துங்கள்
பாஜக உங்களின் இந்துத்துவத்தை நிறுத்துங்கள்.. எங்கள் மீது எதையாவது திணிக்க நினைத்தால் நாங்கள் அதை அழித்து விடுவோம்.. நாங்கள் முட்டாள் அல்ல.. திராவிட நாடு.. மாதச்சார்பற்ற நிலம்..
|
கன்றுக்குட்டி கொலையை மறைக்க
கன்றுக்குட்டியை கொன்றததை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்கு காங்கிரசார் திராவிட நாடு பிரச்சனையை உருவாக்கியுள்ளனர். இந்த மக்கள் தால் 60 ஆண்டுகளாக நம்மை ஆட்சி செய்துள்ளார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள் என்கிறார் இந்த நெட்டிசன்..