தீபாவுக்கு எந்த விதத்திலும் குறையில்லாத எண்டெர்டெய்னர் இந்த "ஜீயர்".. நெட்டிசன்ஸ் கலகல!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக பாதியிலேயே தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றதை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக பாதியிலேயே தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றதை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியது சர்ச்சையானது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நேற்று இரண்டாவது முறையாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்ற அவர் இன்று திடீரென உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இதனை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
|
உண்ணும் விரதத்தின் எதிரொலி
நாங்க வச்ச உண்ணும் விரதத்தின் எதிரொலி காரணமாக ஜீயர் உண்ணா விரதம் முடிவடைந்தது.
எனக்கு அப்பவே தெரியுமுல.. என்கிறது இந்த டிவிட்
|
பசி கண்ண கட்டிருச்சோ
உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் -செய்தி
பசி கண்ண கட்டிருச்சோ.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
அவ்ளோ ஈஸி இல்ல
இந்த அவமானம் தேவையா உனக்கு..#ஜீயர் #ரவுடியா இருக்கறது அவ்ளோ ஈஸி இல்லன்னு புரிஞ்சுருக்கும்... என்கிறது இந்த டிவிட்
|
உங்களுக்கு இதே பிழைப்பா போச்சு
ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட்ட போது
டே பசிக்குது டா சிக்கிரம் இட்லிய வைடா
அட இருங்க ஜீயர் உங்களுக்கு இதே பிழைப்பா போச்சு.. கலாய்க்கிறது இந்த மீம்
|
எண்டெர்டெய்னர்
தீபாவுக்கு எந்த விதத்திலும் குறையில்லாத எண்டெர்டெய்னர் இந்த ஜீயர்.. என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்












Click it and Unblock the Notifications