யாதும் பாகே யாவையும் இனிப்பே..! மைசூர் பாகுபாடு இங்கு இல்லை..!
மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் நெட்டிசன்கள் கலக்கல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் நெட்டிசன்கள் கலக்கல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் ரசகுல்லா யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு மேற்குவங்கமும் ஒடிசாவும் சொந்தம் கொண்டாடிய நிலையில் மேற்வங்கத்திற்கே வெற்றி கிட்டியது.
இந்நிலையில் மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. புவிசார் குறியீடுக்கு இந்த கேள்வி அவசியம் என்பதால், இந்த பிரச்சனை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலக்கல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
கொழுந்து விட்டு எரிகிறது!
மைசூர் பாக் யாருக்கு சொந்தம்...தமிழகமா, கர்நாடகாவா? -விவாதம்
போச்சுடா ! ஏற்கனவே காவேரி பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறது! இப்போ இந்த விவாதம் முக்கியமா ? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..
|
நாட்டின் மிக முக்கிய விவாதம்
மைசூர்பா யாருக்கு சொந்தம்? நாட்டின் மிக முக்கிய விவாதம்.. என்கிறார் இந்த வலைஞர்
|
யாவையும் இனிப்பே..!
யாதும் பாகே யாவையும் இனிப்பே..!
மைசூர் பாகுபாடு இங்கு இல்லை.. என்கிறது இந்த டிவிட்
|
மைசூர் பாகாக்க
யாகாவாராயினும் மைசூர் பாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.. என மைசூர் பாகுக்காக குரளை கூறுகிறார் இந்த நெட்டிசன்..
|
அத சொல்லுங்க மொதல்ல..
மைசூர்பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் சண்டை!
#காவிரி யாருக்கு சொந்தம் அத சொல்லுங்க மொதல்ல.. என்கிறார் இந்த வலைஞர்