இது கத்தரிகாய் குழம்புதான்.. புரட்டாசி மாசங்கறதால வாசனைக்காக மட்டன்பொடி போட்டேன்!
சென்னை : புரட்டாசி மாதம் என்பதால், நிறைய பேர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.. சிக்கன், மட்டன், மீன் என அசைவ உணவுகளின் விலை குறையும் என எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் மீம்ஸ் போட்டு தங்களது புலம்பல்களை சமூகவலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே அசைவ உணவு சாப்பிடுபவர்களில் பலர் விரதம் இருக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால் அவர்கள் எப்போது இந்த மாதம் முடியும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் சிக்கன், மட்டன் மற்றும் மீன் என அசைவ விற்பனைக் கடைகளில் எல்லாம் விற்பனை மந்தமாகி விடும்.
எனவே, ஆடி மாதத் தள்ளுபடி மாதிரி இந்த புரட்டாசி மாதத்தில் மேற்கூறிய இந்தக் கடைகளிலும் ஏதாவது தள்ளுபடி போடுவார்கள் என விரதம் இருக்காதவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள் போலும். ஆனால், வழக்கம் போல் இந்தக் கடைகளில் அதே கூட்டம் அப்படியேதான் இருக்கிறது.
இதனால் நொந்து நூடுல்ஸான நம் நெட்டிசன்கள் தங்களது ஏமாற்றத்தை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications