“மகிழ்ச்சி பெறுவதில் அல்ல.. கொடுப்பதில் உள்ளது”.. சரிதான் பிரியாணிக்கு ரெடி பண்றான் போல!
சென்னை : ரம்ஜானுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், இப்போதே பிரியாணி மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
ஏப்ரல், மே மாதங்கள் என்றாலே வெயிலைப் பார்த்து தெறித்து ஓடும் மக்கள், அந்த மாதங்கள் எப்போது வரும் என பெரிதும் எதிர்பார்ப்பதற்கு முக்கியக் காரணம் ரம்ஜான். இஸ்லாமிய நண்பர்களுக்கு மட்டுமல்லாமல், பிரியாணி பிரியர்கள் எல்லோருக்குமே ரம்ஜான் கொண்டாட்டமான பண்டிகை நாள்தான்.
தற்போதெல்லாம் நள்ளிரவில் கூட பிரியாணி கிடைக்கிறது.. தெருவுக்கு பத்து பிரியாணிக் கடைகள் முளைத்து விட்டன. ஆனாலும் ரம்ஜான் நாளன்று இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் தரும் பிரியாணியின் சுவைக்கு அருகில் இவற்றால் வரக்கூட முடியாது. அதனால்தான் ரம்ஜான் அன்று எப்படியாவது அன்பான அந்த பிரியாணியைச் சாப்பிட்டுவிட வேண்டும் என மக்கள் நினைப்பார்கள்.
இந்நிலையில், அடுத்த வாரம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்போதே பிரியாணிக்கு அடிபோட ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள். சூசகமாக இப்போதே பிரியாணி கேட்டு இஸ்லாமிய நண்பர்களிடம் மீம்ஸ் போட்டு பிரியாணியை அட்வான்ஸ் புக்கிங் செய்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில பிரியாணி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications