தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: 24-ல் பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபை புதன்கிழமை கூடுகிறது.
சட்டசபை கூட்டத்தில் கவர்னர் பாத்திமா பீவி உரையாற்றுவார். தமிழக அரசின் சாதனைகள், புதிய திட்டங்கள், புதிய கொள்கைகள் ஆகியவை குறித்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். பின்னர் அந்த உரையை சபாநாயகர் பழனிவேல்ராஜன் தமிழில் மொழியில் மொழியாக்கம் செய்வார்.
வியாழக்கிழமை ஆளுநிர் உரை மீதான விவாதம் துவங்கும். ஆளுங்கட்சி உறுப்பினர் விவாதத்தைத் துவக்கி வைப்பார். இறுதியில் விவாதத்திற்குப் பதில் அளித்து தல்வர் கருணாநதி பேசுவார்.
புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: திருச்சி-2, நெல்லிக்குப்பம், அறந்தாங்கி தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை காலை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் அறையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
பட்ஜெட்: ஆளுநிர் உரை மீதான விவாதத்திற்குப் பிறகுசட்ட சபை ஒத்தி வைக்கப்படும். பின்னர் இந்த மாதம் 24 ந்தேதி மீண்டும் கூடும். அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தல்வர் கருணாநதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
சட்டசபை ரூ 11 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் பல்வேறு அலங்கார வளைவுகளும், மின்சார விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications