ஓபியம் உற்பத்தியில் பர்மாவை முந்திய ஆப்கானிஸ்தான்
வாஷிங்டன்: ஓபியம் எனப்படும் போதைப் பொருள் உற்பத்தியில் ஆப்கானிஸ்தான் உலகிலேயே முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பர்மாவை அது ந்தி விட்டது.
பாரம்பயமாக பர்மாதான் ஓபியம் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு நிலவிய இதமான கால நிலை உள்பட பல சாதகமான சூழ்நலைகள் காரணமாக பர்மாவை முந்தி உற்பத்தியில் முன்னணிக்கு வந்துள்ளது ஆப்கானிஸ்தான். அமெக்க வெளியுறவுத் துறையின் ஆண்டு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான அரசு இல்லாத, ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான் தீவிரவாதிகள் இயக்கம் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டு வருகிறது. 1999-ல் ஆப்கானிஸ்தானில் 1670 டன் ஓபியம் உற்பத்தி செய்யப்பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு 1000 டன்னுக்கும் குறைவான ஓபியம்தான் உற்பத்தி செய்யப்படும். கடந்த ஆண்டு இது 24 சதவீதம் அதிகம் ஆகும்.
பர்மாவில் வழக்கமாக 1750 டன் ஓபியம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இது தற்போது 1090 டன்னாக குறைந்து விட்டது.
பர்மாவும், ஆப்கானிஸ்தானும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதால் இரு நாடுகளுக்கும் போதைப் பொருள் அற்ற நாடுகள் என்ற சான்றிதழை கொடுக்க அமெக்க அதிப கிளிண்டன் கடந்த ஆண்டு மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதன் முலம் அமெக்காவிலுள்ள மருந்து நறுவனங்கள் மற்றும் பிற நறுவனங்களிடமிருந்து கடன் பெறும் தகுதியை இந்த நாடுகள் இழந்து விட்டன.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் இயக்கம், ஓபியம் உற்பத்தியாளர்களை மறைகமாகக் காப்பாற்றி வருகிறது. இவர்கள் மீது பத்து சதவீத வ மட்டுமே விதிக்கப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.