வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போலீஸ் விசாரணைக்குச் சென்ற வாலிபர் தற்கொலை: சென்னையில் பரபரப்பு
சென்னை:
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் வீடு திரும்பியதும் தூக்குப் போட்டு இறந்தார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (32). இவரை போலீசார் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல்நலையத்திலிருந்து வீடு திரும்பிய அவர் சிறிது நிேரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு ன் எழுதிய தற்கொலைக் கடிதத்தில், போலீசான் தொந்தரவு தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது.
இச் சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலாஜியின் அண்ணனுக்கும், பாலாஜிக்கும் சொந்தமான 3 வீடுகளில் வாடகை வாங்கி அதைப் பிக்கும் விஷயத்தில் அண்ணன் தம்பி இருவருக்கும் தகராறுஏற்பட்டதாகவும், அது தொடர்பாக பாலாஜியின் அண்ணன் பாலா ஜி மேல் போலீசில் புகார் கொடுத்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து புலன்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.