வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
விசாரணைக் கைதி சாவு எதிரொலி : 5 போலீசார் சஸ்பெண்ட்
சென்னை:
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் தற்கொலை செய்ததையடுத்து திருவொற்றியூர் காவல்நலையத்தில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை, திருவொற்றியூரைச் சேர்ந்த பாலாஜி என்ற வாலிபர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் காவல்நலையத்திலிருந்து வீடு திரும்பிய அவர் வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.
இதையடுத்து அவர் வீட்டின் சுற்றுப்புறத்திலிருந்த மக்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து , நிகர கமிசனர் காளித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்தார்.
இன்ஸ்பெக்டர் வின்சென்ட், ஏட்டு தங்கராஜ், மனோகரன், சடகோபன், மற்றும் கான்ஸ்டபிள் பார்த்தசாரதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications