வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எந்த நிாட்டின் நிெருக்குதலுக்கும் இந்தியா அடிபணியாது: பிரதமர்
பிரதமன் சிறப்பு விமானத்தில் (மொசியஸ்-டெல்லி):
இந்திய பொருளாதார சீர்திருத்த விஷயத்தில் எந்த நிாட்டின் நிெருக்குதலுக்கும் அரசு அடிபணியாது என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
மொசியசில் இருந்து டெல்லி திரும்புகையில் விமானத்தில் அவர் நருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், மாறிவிட்ட சர்வதேச பொருளாதார சூழ்நலையில் இந்தியா மட்டும் தனித்து இருந்துவிட இயலாது என்றார்.
சர்வதேச பொருளாதார சீர்திருத்தங்களை கைவிட்டு இந்திய உடனே காந்திய பொருளாதாரத்துக்கு திரும்ப வேண்டும் என சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுதர்ஷன் கருத்து தெவித்துள்ளது குறித்து கேட்டபோது பிரதமர் இவ்வாறு பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், காந்தியப் பொருளாதாரத்தின் சில கோட்பாடுகளை நிாம் நிமது பொருளாதார சீர்திருத்தத்திலேயே புகுத்தி உள்ளோம் என்றார்.
சுதர்ஷன் உண்மையிலேயே என்ன கூறினார் என்பதை அறிந்த பிறகு எனது ழு கருத்தை வெளியிடுவேன். ஆர்.எஸ்.எஸ்சில் அரசு ஊழியர்கள் சேருவதற்கு தடையை குஜராத் அரசு விலக்கியதும் பின்னர் எதிர் கட்சிகள் போராட்டத்தால் அந்த தடை மீண்டும் அமலாக்கப்பட்டதும் மத்திய அரசுக்கு கிடைத்த தோல்வியாக எடுத்துக் கொள்ள இயலாது என்றார்.
யு.என்.ஐ.