வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய உணவுக்கு கிளிண்டன் பாராட்டு
டெல்லி:
இந்தியா வந்துள்ள அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டன் மவுயா ஷெராட்டன் நிட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.
அவர் ஹோட்டலில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ஹோட்டல் ஊழியர் அனைவரையும் தனித்தனியே சந்தித்துக் கைகுலுக்கிப் பேசினார்.
ஹோட்டல் தகவல்தொடர்பாளர் பிரதிமா வாசன் கூறுகையில், நிான் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியபோது கிளின்டன் அவரை துகில் தட்டிக்கொடுத்து இந்தியா வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறியதாக பிரதிமா வாசன் கூறினார். மேலும் அவர் பில்கிளின்டனைப் பார்ப்போம் என்று கண்ட கனவு பலித்துவிட்டது என்று கூறினார்.
ன்னதாக கிளின்டன் வந்திறங்கியதும், 8 பெண்கள் தங்கள் மாநலப் பாரம்பய உடையில் கிளின்டனுக்கு வரவேற்பு அளித்தனர். அவர்கள் காஷ்மீ, குஜராத்தி, மகாராஷ்டிரா, பஞ்சாபி, பெங்காலி,தென்னிந்திய, மிசோரம், லக்னோ என்று அந்தந்த மாநல உடைகளை அணிந்து கிளின்டனை வரவேற்றனர்.
கிளின்டன் டெல்லிக்கு வந்து ஹோட்டல் மவுயாவுக்குச் சென்றதும் அவரை ஹோட்டல் ஊழியர் அவந்தி பாண்டே ஆரத்தி எடுத்து வரவேற்றார். ஹோட்டலில் கிளின்டனின் மகள் செல்சியா, மாமியார் டோரதி ரோதம் ஆகியோருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கிளின்டன் மற்றும் செல்சியா, மாமியார் டோரத்தி ஆகியோர் அங்குள்ள ரெஸ்ட்டாரன்டுக்குச் சென்று இரவு உணவருந்தினர்.
அங்கு தந்தூ சிக்கன், பாராகபாப், ர்க்மலாய், தந்தூ போம்பிரட், தந்தூ ஜிங்கா ஆகியவற்றை கிளின்டன் குடும்பத்தினர் வாங்கி ரசித்து சாப்பிட்டனர். இந்திய உணவுகள் தனக்கு மிகவும் பிடித்ததாக கிளின்டன் ஹோட்டல் ஊழியர்களிடம் கூறினார்.
பங்களாதேஷ் கிளம்புகையில், கிளின்டன் டெல்லியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் தேன் சாப்பிட்டுவிட்டுச் சென்றார்.
ஐ.ஏ.என்.எஸ்