வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிங்கப்பூர் செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மும்பை:
சிங்கப்பூர் செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 15 சதவீதமாக உயரும் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரிய உதவி இயக்குநர் விமல் ஹர்னால் கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நடுத்தர பிரிவு மக்கள் ஏராளமானோர் சிங்கப்பூருக்கு அதிக அளவில் செல்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படும் நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.
சிங்கப்பூருக்கு அதிக சுற்றுலா பயணிகள் வரும் நாடுகளில் 9-வது நாடாக இந்தியா உள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஜூராங் பறவைகள் பூங்கா, அன்டர்வாட்டர் வேர்ல்ட், சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டர், சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் விருப்ப இடங்களாக உள்ளன.
கடந்த ஆண்டு 2,88,000 இந்தியர்கள் சிங்கப்பூர் வந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச அளவில் பொருளாதார சந்தைகள் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், இந்திய பொருளதார சூழ்நிலை மட்டும் பாதிக்கப்படவில்லை. இதன் காரணமாக சிங்கப்பூர் வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை.
ஒவ்வொரு மாதமும் சிங்கப்பூருக்கு தவறாமல் வருபவர்களில் சீனாவும், இந்தியாவும் முதலிடத்தில் உள்ளன.
யு.என்.ஐ.