வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இங்கிலாந்து பிரதமரைக் கவர்ந்த திருக்குரான்
லண்டன்:
திருக்குரானில் உள்ள வாசகங்கள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.
பிளேர், சர்ச்சிற்குச் செல்லும் தீவிர கிறிஸ்தவர். ஆனால் டோனி பிளேர் ஒரு கிறிஸ்தவராக இருந்த போதும் முஸ்லீம் மதத்தைப் போற்றுகிறார். அவரது பெருந்தன்மை பாராட்டுக்குரியது என்று பிபிசி டி.வி. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டோனி பிளேர் கூறுகையில், மனித வாழ்வில் மிக முக்கியப்பங்கு வகிக்கும் அன்பு, மனிதநேயம், தவறுகளை மன்னிக்கும் கோட்பாடுகள் ஆகியவை குறித்து திருக்குரானில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் தேவையானதை நமக்கு வேண்டுமானால் பின்பற்றலாம். மேலும் திருக்குரானில் எனக்கு இரண்டு பக்கங்கள் மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை முழுவதும் படித்து என்னை நான் பக்குவப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்,
பி.பி.சி.டிவிக்கு அளித்த பேட்டியில் பிளேர் இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications