வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சாதி உணர்வைத் தூண்டும் படங்களுக்கு எதிராக புதிய தமிழகம் போராட்டம்
சென்னை:
சாதி உணர்வுகளைத் தூண்டும் தமிழ்சினிமா படங்களை தடை செய்யக் கோரி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி
தமிழ் சினிமாக்களில் கடந்த 10 ஆண்டுகளாக சாதி உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்கள் மையமாக வைத்து படம் எடுக்கப்படுகின்றன. ஒரு சில குறிப்பிட்ட சாதிகளை உயர்த்தியும், போற்றியும் சித்தரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் உக்கிரம் அடைந்துள்ளது. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். சாதிப் பெயரை டைட்டிலாகக் கொண்ட படங்கள், பாடல்கள், கதை வசனங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
இத்தகைய படங்களை, பாடல்களை தடை விதிக்க வேண்டும். ரேடியோ டிவிக்களில் இதுபோன்ற படங்களை ஒளிபரப்பக் கூடாது. அதைத் தடுக்க தமிழக செய்தித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 6 ம் தேதி புதிய தமிழகம் சார்பில் சென்னை சாஸ்த்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.