வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இப்போது இல்லை - பிரதமர் வாஜ்பாய்
புது தில்லி:
மத்திய அமைச்சரவை இப்போதைக்கு விரிவாக்கம் செய்யப்படாது. அது தொடர்பாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
புது தில்லியில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
மத்திய அமைச்சரவையை விரிவுபடுத்துவது தொடர்பாக இப்போது எந்த யோசனையும் இல்லை. நிதிஷ் குமார், உமா பாரதி, நவீன் பட்நாயக் போன்றவர்களின் ராஜிநாமாவால் தற்போதைய அமைச்சரவையில் காலியிடங்கள் உள்ளன என்பது உண்மை.
காலியிடங்கள் தக்க நேரத்தில் நிரப்பப்படும். அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும். எப்போது அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்பதை இப்போது சொல்லமுடியாது.
சமீபத்தில் நடந்த மாநிலங்களைவைத் தேர்தலில் பெரிய அளவில் கட்சி மாறி வாக்களிப்பு நடந்துள்ளது. இதனால் பெரிய அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்டன. கட்சி மாறி வாக்களிப்பது பற்றி ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications