வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
36 சீக்கியர்கள் படுகொலையைக் கண்டித்து காஷ்மீரில் பந்த்
ஸ்ரீநகர்
காஷ்மீரில் 36 சீக்கியர்கள் படுகொலையை கண்டித்து வெள்ளிக்கிழமை பந்த் நடந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
காஷ்மீரில் கடந்த 20 ம் தேதி செட்டிசிங்புரா பகுதியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 36 சீக்கியர்களை எழுப்பி வரிசையாக நிற்கவைத்து கண்மூடித்தனமாய் தீவிரவாதிகளால் சுட்டுக்கொன்றனர்.
இதற்குப் பல்வேறு அமைப்புகள், அரசியல்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை அகில இந்திய சீக்கியர்கள் சங்கம் ஒரு நாள் பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு முழு ஆதரவு இருந்தது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மூடப்பட்டிருந்தன.
பஸ் போக்குவரத்து எதுவும் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தது. இந்த பந்திற்கு ஹூரியத் அமைப்பும் ஆதரவு தெரிவித்தது.
காஷ்மீரில் சாலைகள் முழுவதும் பொதுமக்களோ, தீவிரவாதிகளோ எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களிலும் ஈடுபடாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.