வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவையில் 1997-ம் ஆண்டு போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த மதக் கலவரத்தில் துப்புறவுத் தொழிலாளி ஒருவரைக் கொன்ற வழக்கில் கைதான மூன்று பேருக்கு கோவை கூடுதல் இரண்டாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1997-ம்ஆண்டு நவம்பர் 29-ம் தேதி கோவையில் போலீஸ்காரர் செல்வராஜ் பணியில் இருந்தபோது சிலரால் குத்திக் கொல்லப்பட்டார். இதையடுத்து நகரில் கலவரம் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு இந்த கலவரம் நீடித்தது. இதில் சிலர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் துப்புறவுத் தொழிலாளி ஒருவரைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த சர்புதின் (21), சம்சுதீன் (20), ஹக்கீம் (20) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பூபாலன் உத்தரவு பிறப்பித்தார்.
இவர்கள் மூவருக்கும் பெயில் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு வராமல் இருந்ததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications