தமிழகத்தில் இன்று
தமிழகத்தில் திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: வைகோ
மதுரை:
ண்தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி ஆகியோருக்கிடையே நடந்து வரும் வார்த்தைப் போர் முடிவுக்கு வரவேண்டும். விரைவில் இதற்கு சமூக தீர்வு காணப்பட வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியிலிருந்து விலகாது. திமுக கூட்டணியில்தான்நீடிப்போம் என்று ராமதாஸ் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட மாட்டாது என்று தமிழகமுதல்வர் கருணாநிதியும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் எந்தக் கூட்டணியும் இல்லை. அதிமுகவில் நடந்துவரும் பொறுப்பாளர்கள் நீக்கத்தால், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். ஜெயலலிதாவின் போக்கு இன்னும் மாறவில்லை.
ஈரோட்டில் மாநாடு:
ஈரோட்டில் விரைவில் 2 நாள் மாநில மாநாடு நடத்தப்படும். இதில் பிரதமர் வாஜ்பாய்கலந்து கொள்கிறர். இவர் தவிர, உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களான மமதாபானர்ஜி, பிரகாஷ் சிங் பாதல், பரூக் அப்துல்லா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
அரசியலில் குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்றால்,குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க ஐந்து ஆண்டுகளுக்குத்தடை விதிக்கப்பட வேண்டும் என்று மதிமுக விரும்புகிறது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications