For Daily Alerts
Just In
உபெர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனா-டென்மார்க் இறுதி மோதல்
கன்னடப் பின்னணி பாடகர் குடும்பத்துடன் ஆற்றில் மூழ்கி பலி
பெங்களூர்:
கன்னட பின்னணிப் பாடகரும், நாட்டுப்புற இசைக் கலைஞருமான ஜி.வி.ஆத்ரி (38) மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், துங்கா ஆற்றில்மூழ்கி இறந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை சிருங்கேரி அருகே இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
ஆத்ரி, அவரது மனைவி, ஐந்து வயது மகன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், துங்கா ஆற்றில் புனித நீராடினர். அப்போது அவர்கள் நீரில்அடித்துச் செல்லப்பட்டனர்.
ஐந்து உடல்கள் தற்போது மீட்கப்பட்டு விட்டன. ஆத்ரியின் மகனுடைய உடல் மட்டும் கிடைக்கவில்லை.
ஆத்ரி, "ஜூனியர் பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று கர்நாடகத்தில் அழைக்கப்பட்டவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 1, 2000, 5:30 [IST]