மேட்ச் பிக்ஸிங்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - கங்குலி
கடத்தப்பட்ட போலீஸாரை மீட்க கல்லூரி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 2 மாணவர்கள் சாவு
ஜகார்த்தா:
கல்லூரி மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற 5 போலீஸாரை மீட்பதற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள்பலியானார்கள். 20-க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தோனேஷியாவில் மேதன் நகரில் திங்கள்கிழமை இச் சம்பவம் நடந்தது. மேதன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை, சூதாட்டவழக்கில் போலீஸார் பிடித்துச் சென்றனர். இவர்களை விடுவிக்கக் கோரி சுமார் 500 மாணவர்கள், போலீஸ் நிலையம் நோக்கி ஊர்வலம் சென்றனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்க போலீஸார் மறுத்துவிட்டனர். இதையடுத்து, 5 போலீஸாரை பிணைக் கைதிகளாக மாணவர்கள் பிடித்துச் சென்றுபல்கலைக் கழகத்தில் வைத்திருந்தனர்.
மாணவர்கள் சிறைப்பிடித்துச் சென்ற 5 போலீஸாரையும் மீட்பதற்காக, பல்கலைகத்துக்குப் போலீஸார் சென்றனர். பிடித்து வைத்துள்ள போலீஸாரைவிடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், மாணவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, மாணவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் குண்டுக் காயம்பட்டு இறந்தனர். 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
அதிரடியாக பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார் பிணைக் கைதிகளாக இருந்த 5 பேரில் 3 பேரை மட்டும் விடுவித்து உடன் அழைத்துச்சென்றுவிட்டனர். மற்ற இருவர் இன்னும் மாணவர்களின் பிடியில் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications