For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கிலாலி ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

கொழும்பு:

இலங்கையின் வட பகுதியில் உள்ள ராணுவத்தின் மற்றொரு முக்கிய முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ராணவத்தின் வசம் இருந்த யானையிறவு மற்றும் பலாலி முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்கி அவற்றை கைப்பற்றியுள்ளனர். அப்போது நடந்தசண்டையில் இலங்கை ராணுவத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ள இடங்களில் இருந்து இலங்கை ராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையே, வட பகுதியில் உள்ள இலங்கை ராணுவத்தின் மற்றொரு முக்கிய முகாமான கிலாலி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். இத்தகவலை, புலிகள் வானொலி தெரிவித்துள்ளது.

வடபகுதியில் உள்ள முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முடிவோடு இலங்கை ராணுவ முகாம்கள் மீது புலிகள் கடும் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே, யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளைத் தடுத்து நிறுத்த இந்தியாவின் உதவியை இலங்கையில்உள்ள புத்த பிட்சுக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

1987-ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் கீழ், விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் தொடுக்க இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட்டால்தீக்குளிப்போம் என்று புத்த பிட்சுக்கள் எச்சரித்தனர். அவர்கள்தான் இப்போது இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்த பிட்சுக்கள்தான், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வே நாட்டு மத்தியஸ்தத்துடன் விரைவில் நடைபெற உள்ளஅமைதிப் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X