முகத்தில் தெளித்த சாரல்...
(நமது நிருபர்)
சென்னை:
தமிழகத்தில் வணிகர் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டிண வணிகர் தின பேரணி, மாநாடு ஆகியவை சென்னையில் நடைபெற்றன. வணிகர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
ஆண்டுதோறும் மே 5ம் தேதியை வணிகர் தினமாக வணிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் சென்னையில் வணிகர்கள் பேரணி நடைபெற்றது. மயிலாப்பூர் லஸ் முனையில் இருந்து இப்பேரணி துவங்கியது.முக்கிய சாலைகள் வழியாக தீவுத் திடலை பேரணி அடைந்தது. பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாலையில் தீவுத் திடலில் வணிகர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், வணிகர் சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.முன்னதாக வெள்ளியன்று சென்னை நகரில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.