தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை பிரச்சனைக்கு தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தாத வகையில் முடிவெடுத்துள்ளார். இது வரவேற்கத் தக்கது என்றுதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் 40 ஆயிரம் சிங்கள ராணுவத்தினர் விடுதலைப்புலிகளிடம் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க இந்தியாவிடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது.
ஆனால் இந்தியா இதற்கு மறுத்து விட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார்.
அப்போது அவர் இலங்கைப் பிரச்சனைக்கு மத்திய அரசு எந்த முடிவெடுத்தாலும் அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இது மிகவும் வரவேற்கத் தக்கது. மாநிலத் தலைவர் என்ற முறையில் பேசாமல் தேசியத் தலைவர் என்ற முறையில் அவர் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு வாழப்பாடி ராமமூர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications