தமிழகத்தில் இன்று
சென்னை:
நாடு முழுவதும் 11ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அதிமுக கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் திங்கள் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு;
விவசாயிகள், தொழிலாளர்களை பாதிக்கக் கூடிய மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து 11ம் தேதி நாடுமுழுவதும் பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில்அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களானரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
உரம் விலை உயர்வு மூலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு, அவர்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுப்படியானவிலை தரப்படவில்லை.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத உரிமை வழங்கப்படவில்லை. அவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கக் கோரியும்,14வது வயது வரை தரமான கல்வியை இலவசமாக வழங்கக் கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
சேலம் உருக்காலை போன்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 784பொருட்களுக்கு சுங்கவரி குறைப்பு உள்பட அரசின் தவறான அணுகுமுறைகள், சாதாரண மக்களை பாதிக்கும் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால்ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கும் என்பதை வலியுறுத்தி 11ம் தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்தில் அதிமுக பங்கேற்கும்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.