தமிழகத்தில் இன்று
சென்னை:
ரூ.340 கோடி திட்ட மதிப்பீட்டில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டு வரும் ""டைடல் மென்பொருள் பூங்கா (டைடல் பார்க்)ஜூலை 4ம் தேதி பிரதமர் வாஜ்பாய் திறந்து வைக்கிறார்.
தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் திங்களன்று நடைபெற்றது. அதற்கு முதல்வர்பதிலளித்தபோது, இந்த தகவலை தெரிவித்தார்.
1998ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசு நிறுவனங்களான "டிட்கோ மற்றும் "எல்காட் ஆகியவை இணைந்து ரூ.340கோடி திட்ட மதிப்பீட்டில் டைடல் மென்பொருள் பூங்கா ஒன்றை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தரமணியில்8ஏக்கர் பரப்பளவில் 12 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடி கட்டடம் 14 தளங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டு வரும் டைடல்பூங்காவிற்கு 21.8.98 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த பூங்காவில் தரை வழியாகவும், செயற்கைக்கோள் வழியாகவும், நுண்ணலைகள் வழியாகவும் செய்திகளை பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ப இக்கட்டடத்தின் மேல் தளத்தில் "வி.எஸ்.என்.எல், தொலைத்தொடர்புத் துறை (டிஓடி), மற்றும் சாப்ட்வேர்டெக்னாலஜி பார்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள்பிரத்யேகமான முறையில் வசதிகளை உருவாக்கி வருகின்றன.
இந்தப் பூங்காவிற்கு 6 ஆயிரம் டன் திறன் கொண்ட குளிர்பதன வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமையும்"தெர்மல் எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் உலகிலேயே மூன்றாவது பெரிய சிஸ்டம் ஆகும். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் ஒன்றும்,ஜப்பான் நாட்டில் ஒன்றும் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளன.
இவை மட்டுமின்றி உலகத் தரத்திலான நவீனமயமாக்கப்பட்ட ஏராளமான வசதிகள் இந்த பூங்காவில் அமைந்துள்ளன.
ஐதராபாத், பெங்களூரில் உள்ள மென்பொருள் பூங்காக்களை விட இது மிகப் பெரியது. இதுவரை பூங்காவின் 50 சதவீத இடம்உலகின் பிரசித்தி பெற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் முதலாவதாக தமிழ்நாடு மென்பொருள் நிதி என்ற ஒன்றை டிட்கோ நறுவனம் தொடங்கி, இதுவரை 4 மென்பொருள்தொழில் முனைவோருக்கு 8 கோடி ரூபாய் முதலீட்டுதவி வழங்கியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications