தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விமானக் கடத்தல் மிரட்டல்: திருச்சியில் தீவிர பாதுகாப்பு
திருச்சி:
திருச்சி விமானநிலையத்திற்கு வரும் விமானம் கடத்தப்படவுள்ளதாக வந்த மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் விமானநிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு விமானத்தில் வந்திறங்கும் பயணிகளும்,விமானத்திற்கு காத்திருக்கும் பயணிகளும் கடும் சோதனைக்குப் பிறகே அனுப்பப் படுகிறார்கள்.
விமான நிலையத்தில் பிற வாகனங்களில் வருபவர்களும் சோதனை செய்யப்பட்ட பின்பே அனுப்பப்படுகிறார்கள்.
திருச்சியிலிருந்து இலங்கை மற்றும் சென்னைக்குச் செல்லும் விமானங்கள் கடும் பரிசோதனைக்குப் பின்னரே அனுப்பப்பட்டது.
பல பிளாட்டூன் போலீஸ் அதிகாரிகள் விமானநிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications