தமிழகத்தில் இன்று
கராச்சி:
இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மரணதண்டனை தர வேண்டும் என்ற மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையைபாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கொலைமுயற்சி, விமானக்கடத்தல் ஆகிய சம்பங்களில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு இரட்டை ஆயுள்தண்டனைவழங்கப்பட்டது.
இதை எதிர்த்து இந்தத் தண்டனை மிகவும் குறைவு இன்னும் கடுமையாய்த் தண்டனை அளிக்க வேண்டும். அதாவது மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்றுகூறி அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக நவாஸ் சார்பில் வக்கீல் ஒருவரை அமர்த்த நேரம் கேட்டதால் அதை ஏற்று நீதிபதி விசாரனையை ஒத்திவைத்தார்.
அரசு தரப்பில் ஷெரீஃபுக்கும் விடுதலை செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் விமானக்கடத்தல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை தர வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி சையத் அஷாப் நீதிமன்றம் அரசு தரப்பின் முறையீட்டின் மீதான தீர்ப்பு மே மாதம் 22 ம் தேதி தெரிவிக்கும் என்றார்.
ஷெரீஃப் ராணுவதினரால் கடந்த அக்டோபர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். விமானக்கடத்தல் மற்றும் தீவிரவாத நடவடிக்கையில்ஈடுபட்டதாகக் கூறி அவர் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஏப்ரல் 6ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரஹ்மான் ஹூசைன் ஜஃப்ரி, ஷெரீஃபின் தம்பி ஷாபாஷ் உட்பட ஆறுபேரை விடுதலை செய்தார்.
ஷன்பாஷ் மற்றும் ஐந்து பேரும் தங்கள் உறவினர்களை கலந்தாலோசிக்ககவும். வக்கீல் ஒருவரை அமர்த்த வேண்டும் என்று கூறியதை ஏற்றுக் கொண்டநீதிபதி வழக்கை ஒத்திவைதார்.
அவர் நீதிமன்றம் அரசு தரப்பு மேல்முறையீட்டையும், நவாஸ் ஷெரீஃப் தன்னை விடுவிக்கக் கோருவதையும் ஒரே சமயத்தில் கேட்டறியும் என்று கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications