தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
அதிமுகவினருக்கு ஜெயலலிதா அன்புக் கட்டளை

சென்னை:

அதிமுகவில் மண்டிக்கிடந்த களைகளை அகற்றி விட்டதால், தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சியும், உற்சாகமும்ஏற்பட்டுள்ளது. சிவபெருமான் ஆலகால விஷயத்தை உண்டதுபோல எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டுஅதிமுகவை தூய்மைப்படுத்தி விட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

தூய நோக்கத்தோடு சிரமம் பாராது நடந்த 40 நாடாளுமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் கட்சியின் அடிப்படைஅமைப்பான கிளைக் கழகங்கள் இப்போது தனி வலிமை பெற்று விட்டன. இயக்கத்தில் இன்று அசுத்தம் அகற்றப்பட்டுதூய்மைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பாற்கடலை கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு மக்களைக் காத்தது போல், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கூறப்பட்ட அவப்பெயர்களை நானே சுமந்து கொண்டு இயக்கத்தை தூய்மைப் படுத்தியுள்ளேன்.

எனக்கு உடல் நலக்குறைவு இருந்தாலும் ஒவ்வொரு நாளும் தொண்டர்களை சந்திக்கும்போது நான் தனி வலிமை பெற்றேன்.இவருக்கு முதுகு வலியாயிற்றே. இவரால் 40 தொகுதிகள் கூட்டத்தையும் தொடர்ந்து நடத்த முடியுமா என்று கேள்விஎழுப்பியவர்கள் உண்டு. அவர்கள் அசந்து போகும் அளவுக்கு இந்த கூட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்ற கிளைக் கழக செயலாளர்கள் உடனடியாக கிளைக் கழக கூட்டங்களை கூட்டி நான்தெரிவித்த விவரங்களை கட்சியினருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த அன்பு கட்டளையை நொடியும் தாமதிக்காமல் செய்துமுடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+