தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் அமைதி நிலவ மத்திய அரசின் 4 அம்சத் திட்டம்
கோயம்பத்தூர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நான்கு அம்சக் கொள்கையை வகுத்துள்ளதாக பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியபொதுச் செயலாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அமைதியின்மை நிலவும் மாநிலங்களில் அமைதி திரும்பநான்கு அம்சத் திட்டம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது.
பேச்சுவார்த்தை, ராணுவ நடவடிக்கை, மேம்பாடு, இறுதி முடிவு என்ற நான்கு நிலை இதில் கடைப்பிடிக்கப்படும்.
தென்னிந்தியாவில் வரக் கூடிய தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications