தமிழகத்தில் இன்று
துபாய்:
உலகப் புகழ் பெற்ற துபாய் சர்வதேச நகைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை துவங்கியது. உலகின் மிகப் பெரிய 88காரட் எடையுடைய கருப்பு வைரம் உள்பட மிக அரிய மற்றும் புதிய நகைகள் இக் கண்காட்சியில் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.
5 நாட்களுக்கு நடைபெறும் இக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து 20 நிறுவனங்கள் உள்பட மற்ற உலகநாடுகளில் இருந்து சுமார் 200-க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது நகைகளை கண்காட்சியில் வைத்துள்ளன.
50 கிலோ எடையுள்ள உலகின் பெரிய மோதிரம், உலகின் பெரிய கிரிஸ்டல் ஜெம் உள்ளிட்ட நகைகள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இக் கண்காட்சியில் மிகப் பழமையான வெள்ளி, பிளாட்டினம், வைரம்,விலைமதிப்பில்லா ரத்தினக் கற்கள், முத்துக்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், பிரேஸில், சைப்ரஸ், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, லெபனான்,கொரியா, சவூதி அரேபிலா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்க ஆகிய நாடுகளின்நிறுவனங்கள் இக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.
யு.என்.ஐ.