தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைகின்றன இந்தியா, ஐரோப்பிய யூனியன்

டெல்லி:

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்பட இந்தியாவும், ஐரோப்பியயூனியனும் முடிவு செய்துள்ளன.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் நகரில் ஜூன் 28-ம் தேதி முதலாவதுஇந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து இந்திய, போர்ச்சுகல் வெளியுறவுத்துறை செயலாள்கள் மட்டத்திலான கூட்டம் டெல்லியில் திங்கள்கிழம நடந்தது.

இதில் இந்தியத் தரப்பில் லலித் மான் சிங் மற்றும் போர்ச்சுகல் தரப்பில் ஜோவோசல்குய்ரோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் குறித்து, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் லலித் மான்சிங் பின்னர்செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான இந்திய உயர் மட்டக்குழு ஜூன் 29-ல் லிஸ்பன் செல்கிறது.

மாநாட்டில் போர்ச்சுகல் பிரதமரும், ஐரோப்பிய யூனியன் தலைவருமானஅந்தோணியோ குட்டரஸ் மற்றும் அமைப்பின் பிற பிரதிநிதிகள்கலந்துகொள்கின்றனர்.

இதுவரை ரஷியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் மட்டுமே,ஐரோப்பிய யூனியன், அரசியல், பொருளாதார, வர்த்தகம் தொடர்பான மாநாட்டைநடத்தியுள்ளது. தற்போது இந்தியாவுடன் மாநாடு நடத்தவுள்ளது.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவது தொடர்பாகமாநாட்டில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின்போது இதுதொடர்பாககூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நிலவும் உறவைமேம்படுத்துவது, அரசியல் பரிமாற்றங்கள், பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல், மனித உரிமைகள், போதைப் பொருள் போக்குவரத்து தடுப்புஆகியவற்றிலும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது என்றார் மான்சிங்.

சல்குய்ரோ பேசுகையில், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நிலவும் பாதுகாப்புத்தொடர்பான பிரச்சினைகள் குறித்து லிஸ்பன் மாநாட்டில் பேசப்படும்.

இந்தியாவுடன், ஐரோப்பிய யூனியன் பெரிய அளவில் வர்த்தகத் தொடர்புவைத்துள்ளது. இந்தியாவுக்கு பெருமளவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டைக்கொடுப்பதும் ஐரோப்பிய யூனியன்தான். 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுஒரே கரன்சியைப் பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியன், இந்தியாவுடன் பல்வேறுதுறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

மாநாட்டிற்கு முன்பாக இந்திய, ஐரோப்பிய யூனியன் வர்த்தகக் கூட்டம் நடைபெறும்.இதில் 30 இந்திய மற்றும் 150 ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள்கலந்துகொள்ளவுள்ளன.

போர்ச்சுகல் வெளியுறவுத் துறை செயலாளர் ஜோவோ சல்குய்ரோவும் உடன்இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+