Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
சியர்ரா லியோன்: 119 வீரர்கள் விடுதலை

பிரீடவுன்:

சியர்ரா லியோனில் கடத்தப்பட்ட 500 ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாப்புப் படை வீரர்கள், அதிகாரிகளில் 119பேரை தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.

இவர்கள் கடந்த இரு வாரங்களாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வந்தனர். காட்டுப் பகுதியில் புதர்களில்இவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் சீருடைகளையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகள்பறித்துவிட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்களில் 93 அமைதிகாப்புப் படை வீரர்கள் சியர்ரா லியோன் தலைநகர் பிரீடவுன் வந்துசேர்ந்தனர். இவர்களில் 73 பேர் ஜாம்பியாவையும் 14 பேர் கென்யாவையும் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட 15நாட்களாக இவர்களுக்கு சரியான உணவு கூட கொடுக்கப்படவில்லை. மேலும் 43 பேர் பிரீடவுன் வருவதற்காகலைபீரியாவில் காத்துக் கொண்டுள்ளனர்.

முன்னதாக லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் தீவிரவாத அமைப்பான புரட்சிகர ஐக்கிய முன்னணியிடம் பேசிஇவர்களை விடுவித்தார். பின்னர் லைபீரியாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பிரீடவுனுக்கு அனுப்பிவைத்தார்.

ஆனால், இன்னும் தீவிரவாதிகளின் பிடியிலேயே உள்ள 347 ஐக்கிய நாடுகள் சபை ஊழயர்கள், வீரர்களின்நிலைமை என்னவென்று தெரியவில்லை. சியர்ரா லியோனின் அரசு ஆதரவுப் படைகள் தொடர்ந்து தீவிரவாதிகள்மீது தாக்குதல் நடத்தினால் இந்த 347 பேரின் நிலைமை மிகவும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+