தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் கல்வி கற்கிறார்கள் என்று சட்டஅமைச்சர் ஆலடி அருணா சட்டசபையில் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் கல்வி கற்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் கணக்கெடுத்துப் பார்த்ததில் ஆயிரத்து இருபத்தியிரண்டு பேர் கல்விகற்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சிறைகளில் தெய்வபக்தி, தேசபக்தி, ஒழுக்கம் போன்ற அனைத்தையும் போதிக்கும் வகையில் பலநலத்திட்டங்களை அரசு திட்டமிட்டுள்ளது.
சிறைக் கைதிகள் அவர்களின் கலாச்சாரப்படி எந்தக் கடவுளை வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளலாம்.சிறைக்குள் ஜாதிமத மோதல்கள் எதுவும் இல்லை. அனைவரும் மனிதர்கள் என்பதே கைதிகளின் பண்பாடாகஇருக்க வேண்டும்.
அவர்களின் குறைகளைக் கேட்பதற்கென்று அமைக்கப்பட்டிருந்த குழுக்கள் 1995 ம் ஆண்டு கலைக்கப்பட்டது.தற்போது மீண்டும் மூன்று மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே கைதிகளின் குறை கேட்கும் குழு அமைக்கத்திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications