தமிழகத்தில் இன்று
கோயம்பத்தூர்:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மூன்றுமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.) செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். இதில் 17 கிராம மக்கள்கலந்துகொண்டனர். கோத்தகிரியில் 30,000 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவசாயிகளை விடுவிக்கக் கோரி விவசாயிகளின் குடும்பத்தினர் போலீஸாரை முற்றுகையிட்டனர்.இதையடுத்துநீலகிரியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பு வகிக்கும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்தலைமையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் சிவசங்கரன், எஸ்.பி. ராமமூர்த்தி, கோவை மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு எஸ்.பி. அசோக் குமார்தாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. கோடை விழாவில் களை இழந்து காணப்படுகிறது. மலர்க்கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.