For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
அபுதாபி அருகே ஒட்டகம், கார் மோதலில் 4 இந்தியர்கள் சாவு

துபாய்:

ஐக்கிய அரபு நாடுகள் தலைநகர் அபுதாபியில் சாலையில் படுத்திருந்த ஒட்டகம் மீது கார் மோதியது. இதனால்பயந்த காரில் வந்து கொண்டிருந்த இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாலையில் இறங்கி ஓடியபோதுமற்றொரு கார் அவர்கள் மீது மோதியது. இதில் நான்கு பேர் இறந்தனர்.

பிதா சயீத் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இறந்தவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மலப்புரம்மாவட்டம் திருரங்காடி என்ற ஊரைச் சேர்ந்த சஹாரா பானு (34), அவரது மகன் ஹனி முகம்மது (12), சகோதரிசஜிதா (31), அவரது மகன் லசின் ஃபர்ஹான் (7) ஆகியோர் இறந்தவர்கள். இவர்களில் சஹாராவும், லசின்ஃபர்ஹானும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் இறந்தனர்.

மே 11-ம் தேதி நள்ளிரவில் இவர்கள் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஒட்டகம் நடுரோட்டில் அமர்ந்திருந்தது.இதைக் கவனிக்காத கார் வேகமாக வந்ததில் ஒட்டகம் மீது மோதியது.

இதனால் பயந்து போன அவர்கள் காரிலிருந்து கீழே இறங்கி சாலையைக் கடந்த ஓடத் துவங்கினர். அப்போதுமறுபுறத்தில் வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் மீது மோதியது. இதில் சஹாராவும், ஃபர்ஹானும்இறந்தனர்.இரண்டு பேர் காயமடைந்தனர். குன்னிமுகம்மது, ஹசன், ஹசிம் குன்னிமுகம்மது, சஃபீல் ஃபர்ஹான்ஹசன் ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X