கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவத் தயார்- டால்மியா அறிவிப்பு
மே 19, 2000
குயிலும் குரங்கும்
(தொடர்ச்சி)
சைவசுத்த போசனமும்,சாதுரியப் பார்வைகளும்
வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் (50)
தேவரீர் காதல் பெறுஞ் சீர்த்தி கொண்டேன்; தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன் ஆரியரே கேட்டருள்வீர்!
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒருதிறத்தால்)
நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் (55)
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-
காதல், காதல், காதல்,
காதல் போயிற், காதல் போயிற்,
சாதல், சாதல், சாதல்.
காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றக் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே (60)
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதுவும்
ஆவி யுருகுதடி. ஆஹா ஹா! என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்
ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! (65)
பேசமுடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,
எப்பொழுது நின்னை இனிப்பிரிவ தாற்றகிலேன்,
இப்பொழுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன் (70)
என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ! நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத்
தப்பி, முகஞ்சுளித்துத் தாவி யொளிந்திடவும் , (75)
ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான் மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாகத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டித் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே,
குட்டிப் பிசாசக் குயிலை யெங்கும் காணவில்லை. (80)
(அடுத்து இருளும், ஒளியும்)
Back To Index












Click it and Unblock the Notifications