தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
திருப்பூரில் ஆயத்த ஆடைக் கண்காட்சி முடிந்தது
கோவை:
திருப்பூரில் 3 நாட்களாக நடந்து வந்த ஆயத்த ஆடை கண்காட்சி முடிவடைந்தது.
இக்கண்காட்சியில் வெளிநாட்டிலிருந்து 85 வர்த்தகர்கள் மற்றும் 57 ஏஜன்ட்டுகள் வருகை தந்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டுவர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ஆயத்த ஆடை கண்காட்சி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று நாள் திருப்பூரில் நடந்த கண்காட்சியில் வெளிநாட்டு வர்த்தகர்கள்பெருமளவில் கலந்து கொண்டனர்.
கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஹாங்காங், சவுதிஅரேபியா ஆகிய நாடுகளிலிருந்து நேரடி வர்த்தகர்களும், 87ஏஜன்டுகளும் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் குளிர்கால ஆடை கண்காட்சி வரும் அக்டோபர் 17 முதல் 19 ம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications