தமிழகத்தில் இன்று
வெல்லிங்டன்:
பிஜித் தீவில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் இன்னும் புரட்சிக்காரர்களின்பிடியில் உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து இந்தியரான பிரதமர் செளத்ரி உள்பட பல எம்.பிக்களையும்,அதிகாரிகளையும் ஜார்ஜ் ஸ்பீட்தலைமையிலான ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்கள் சிறை பிடித்தனர். ஆட்சியையும் கைப்பற்றினர்.
அவர்களைச் சமாதானப்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. இந்த நிலையில், காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் டான் மெக்கின்னன், பிஜி அதிபர், புரட்சியாளர்கள் தலைவர் ஸ்பீட்ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையைச் சொல்வதானால், இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நிலமை மிகவும்மோசமாக உள்ளது. விட்டுக் கொடுக்கும் போக்குடன் ஜார்ஜ் ஸ்பீட் இல்லை.
ஜார்ஜ் ஸ்பீட் கூறுகையில், கடந்த வாரம் வரை நான் யாரென்றே யாருக்கும் தெரியாது. இப்போது நான் உலகப் புகழ் பெற்று விட்டேன். இதை அப்படியேதக்கவைத்துக் கொள்ளப் போகிறேன் என்றார் என்று மெக்கின்னன் கூறினார்.
இதற்கிடையே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பிஜித் தீவின் பழங்குடியினர் சபைத் தலைவர்கள் வியாழக்கிழமையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.புதியஇடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அதிபர் ரத்து கமீசே மாராவிடம் அவர்கள் அறிக்கை கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
மெக்கின்னன் தொடர்ந்து கூறுகையில், பிடித்து வைத்துள்ள அனைவரையும் உடனடியாக, எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்று நானும்,ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் செர்ஜியோ வியரா டிமெல்லோவும், ஜார்ஜ் ஸ்பீடிடம் கோரிக்கை விடுத்தோம்.
பிரச்சினைக்கு என்ன தீர்வு காணப்பட்டாலும், அது 1997-ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று பழங்குடித்தலைவர்களிடமும் கண்டிப்பாக கூறியுள்ளோம். இல்லாவிட்டால் சர்வதேச சமுதாயத்தின் கண்டனத்தைப் பெற வேண்டியதிருக்கும் என்றும் அவர்களைஎச்சரித்துள்ளோம்.
இரண்டு முறை தாக்கப்பட்டார் மகேந்திர செளத்ரி:
பிரதமர் மகேந்திர செள்திரியிடம் பேசுகையில், அவரும், அவரது மகனும் இரண்டு முறை புரட்சிக்காரர்ளால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார் என்றுமெக்கின்னன் கூறினார்.
இதற்கிடையே, இந்திய வம்சாவளியினர் யாரும் பிஜி அரசில் இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்று ஜார்ஜ் ஸ்பீட் பத்திரிகையாளர்களுக்கு விடுத்துள்ளசெய்தியில் கூறியுள்ளார். அதிபர் மாராவும், 1987-ல் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த முன்னாள் ராணுவத் தளபதி ரபுகாவும், பிஜி மக்களின் உணர்வுகளைஅடகு வைத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.