தமிழகத்தில் இன்று
மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் வாக-னப் பிர-ச்-சா-ரம்
சென்னை:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி வாகனப் பிரச்சாரம் மேற்கொள்கிறது.
கன்னியாகுமரியிலும், கோவையிலும் வெள்ளிக் கிழமை புறப்படும் பிரச்சார வேன்கள், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விட்டு ஜூன் 5 அல்லது 6ம் தேதியில் சென்னை வந்து சேருகின்றன. அதன் நிறைவாக சென்னைமண்ணடியில் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று இக்கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் வெள்ளியன்று துவங்கும் வேன் பிரசாரத்தை கேரள சட்டசபை துணை சபாநாயகர் சி.ஏ.குரியன்துவக்கி வைக்கிறார். தா.பாண்டியன் தலைமை வகிக்கிறார். கோவையில் தாம் துவக்கி வைக்கவிருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.
ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்தும், தமிழக விவசாயிகளின் கடனை ரத்து செய்யக்கோரியும் பிரசாரம் செய்யப்படும். உலக வங்கியின் கட்டளையை ஏற்று ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையைமத்திய அரசு மாற்றியுள்ளது.
இதன் காரணமாக 1440 பொருட்களின் இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளதால், இந்திய சிறுதொழில்கள்பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக தேயிலை, முட்டை, உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கைத்தறி,விசைத்தறித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.