தமிழகத்தில் இன்று
சென்னை:
இளைஞர் மேம்பாட்டுத் துறை என்ற புதிய துறையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
2000-2001-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்போது இளைஞர்களை நல்வழிப்படுத்த இளைஞர்மேம்பாட்டுத் துறை என்று இளைஞர்களுக்காக தனித் துறை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதிஅறிவித்தார். அந்த அறிவிப்பின்படி இப் புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களின் நேரம் மற்றும் திறமையை ஒருமுகப்படுத்தி அவர்களை ஆரோக்கியத்துடன் வாழ செய்யவும், மதநல்லிணக்கத்தில் ஈடுபடுத்தவும் இத் துறையின் செயல்பாடு இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய துறையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டுநம்மால் முடியும்" என்ற புதிய இதழையும் அரசு வெளியிட்டுள்ளது. முதல் இதழை முதல்வர் கருணாநிதிவெளியிட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பெற்றுக் கொண்டார்.