தமிழகத்தில் இன்று
திருச்சி:
குடும்ப ரேஷன்கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி கொடுக்கப்படும் என்று கே.என்.நேரு கூறினார்.
தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது சொந்த ஊரான காணக்கினியநல்லூரில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 10.5 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. இது 11 மாதத்திற்குப் பொது விநியோகத்திற்குப் போதுமானது.
மத்தியஅரசு தற்போது 1 லட்சத்து 31 ஆயிரம் டன் அரிசி வழங்கி வருகிறது. முதல்வர் கருணாநிதி பிரதமரை டெல்லியில் சந்தித்து கூடுதலாக அரிசி வேண்டும்வலியுறுத்தியுள்ளார்.
1 லட்சத்து 65 ஆயிரம் டன் அரிசி வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குடும்ப கார்டுகளுக்கு தலா இருபது கிலோ அரிசி தர வேண்டும் எனமுதல்வர் உத்தரவிட்டுள்ளார். பொது விநியோகத் திட்டத்திற்காக மாதம் இரண்டு லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.