For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ராமேஸ்வரம் கடலில் நகைகளுடன் சிலை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கடலில் தங்க நகைகளுடன் கருங்கல் சிலை கிடைத்தது.
ராமேஸ்வரம் சேராங்கோட்டை கரையூர் பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்வகுமார். இவர் அங்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன் வலை கனத்தது.
உடனே வெளியே இழுத்துப் பார்த்த போது அதில் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டிருந்த பொட்டலத்தில்ஒன்றரை அடி உயரத்தில் கல்சிலை இருந்தது. கூடவே அச்சிலையில் 3 தங்கச் சங்கிலிகளும் அணிவிக்கப்பட்டுஇருந்தது. அதில் ஒரு டாலர், மூன்று மெட்டிகள், 6 ரூபாய் 25 காசுகள் ஆகியவையும் இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட அதிகாரிகள் சிலையைக் கைப்பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
Story first published: Thursday, May 25, 2000, 5:30 [IST]