தமிழகத்தில் இன்று
டெல்லி:
சமதா கட்சித் தலைவர் நிதிஷ் குமார் உள்பட மேலும் இருவர் மத்திய அமைச்சர்களாக சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.
மத்திய அமைச்சர்களாக இருந்த நிதிஷ் குமார், நவீன் பட்நாயக், உமா பாரதி ஆகியோர் ராஜிநாமா செய்ததைஅடுத்து 3 இடங்கள் காலியாக இருந்தன.
பிகார் முதல்வர் பதவிக்காக நிதிஷ் குமாரும், ஒரிசா முதல்வர் பதவிக்காக நவீன் பட்நாயக்கும், உள்கட்சிப்பிரச்சினை காரணமாக உமா பாரதியும் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பிகார்முதல்வராக முதலில் தேர்வு செய்யப்பட்ட நிதிஷ் குமார், அமைச்சரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கமுடியாமல் தோல்வியடைந்தார். தற்போது லல்லு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி பிகார் முதல்வராகஉள்ளார்.
பிகார் முதல்வர் பதவிக்காக, மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நிதிஷ் குமார், பிகார் முதல்வர் பதவிகிடைக்காததால் விரக்தியில் இருந்தார். இதையடுத்து அவர் மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம்என்று கருதப்பட்டது.
அதன்படியே, சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் நிதிஷ் குமாருடன், பிஜு ஜனதாதளத்தைச் சேர்ந்த அருண் சேதி, பிரிஜ் கிஷோர் திரிபாதி ஆகியோர் மத்திய அமைச்சர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். நிதிஷ் குமார் காபினெட் அமைச்சரவாகவும் மற்ற இருவர் இணை அமைச்சர்களாகவும்பதவியேற்றனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மூன்று பேருக்கும் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 74 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 29 பேர்காபினெட் அமைச்சர்களாகவும், 7 பேர் இணை அமைச்சர்களாகவும், 38 பேர் துணை அமைச்சர்களாகவும்உள்ளனர்.
யு.என்.ஐ.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications