தமிழகத்தில் இன்று
ரேஷன் கடை --தி-ல்-லு-முல்-லு-க-ளை த-டுக்க மு-தல்-வர் உத்-த-ர-வு
சென்னை:
ரூ.1,800 கோடி மானியச் சுமையை தாங்கிக் கொண்டு தமிழக அரசு குறைந்த விலையில் வழங்கும் ரேஷன் அரிசித் திட்டத்தைசெயல்படுத்துவதில் மாவட்ட கலெக்டர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக -முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
சென்னையில் சனிக்கிழமை துவங்கிய மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் -முதல்வர்கருணா-நிதி பேசியதாவது:
மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அ-ரிசியின் விலையை உயர்த்திய போதிலும், தமிழக அரசு -மூன்றரைரூபாய் விலையிலேயே தொடர்ந்து வழங்கி வருகிறது. 1800 கோடி ரூபாய் மானியச் செலவில் நிறை-வேற்-றப்படும் இத்திட்டத்தில்மாவட்ட கலெக்டர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படும் வகையில் பொது விநியோகத் திட்டம் (-ரே-ஷ-ன் கடை-கள்) ஒளிவு மறைவின்றிச் சிந்தாமல்,சிதறாமல் உ-ரியவர்களுக்கு உ-ரிய -நரத்தில் உகந்த அளவில் சென்று சேர மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.இப்பணியை தினந்தோறும் ஆய்வு என்கிற அளவில் தீவிரப்படுத்துவது ஒன்றே இலக்கை அடைய உதவும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம்மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 16,808 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 1,863 பணிகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ளஅனைத்துப் பணிகளையும் 30.6.2000க்குள் நிறைவேற்றிட மாவட்ட கலெக்டர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர்கள் இறுதிப் பட்டியலைப் பெற்று 15.6.2000க்குள் நிர்வாக அனுமதிவழங்கி, டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளையும் ந-நிறைவேற்றிட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 250 கோடியே 50 லட்சம் ரூபாய்தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 17289 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 13,795 பணிகள்டிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தையும் 30.6.2000க்குள் -முடிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு ஊராட்சியிலும் தெரு விளக்குகள் இல்லையென்றோ, எரியவில்லை என்றோ எந்தக் குற்றச்சாட்டும் எழுவதற்குஇடமில்லாமல் விளக்குகள் அனைத்தும் எரிய -நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உழவர் சந்தைகள் இதுவரை 44 திறக்கப்பட்டு, 31 கோடி ரூபாய் மதிப்பில் 49800 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.எஞ்சிய 56 உழவர் சந்தைகளையும் 31.7.2000க்குள் தொடங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications