மேட்ச் பிக்ஸிங்: அஜய் சர்மாவுக்காகக் காத்திருக்கிறது சிபிஐ
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய வீரர்கள் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் மத்தியு புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), முன்னாள் இந்தியகிரிக்கெட் வீரர் அஜய் சர்மாவிடம் விசாரிக்க உள்ளது.
தற்போது லண்டனில் உள்ள அவருக்கு இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பியவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும்என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான கபில் தேவ் மீதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் உலகையே அந்த குற்றச்சாட்டுகள் பெரிய புயலைக்கிளப்பியுள்ளது.
தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் பிரபாகர் தெரிவித்தார். மேலும், தனது குற்றச்சாட்டுகளுக்குஆதரவாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் எடுக்கப்பட்ட பேட்டியின் வீடியோ ஆதாரத்தையும் அவர் வைத்துள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் சிபிஐயிடம் அந்த வீடியோ ஆதாரத்தைத் தரவுள்ளதாக பிரபாகர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் அஜய் சர்மா ஈடுபட்டுள்ளது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம்மேலும் விசாரணை நடத்தினால் இவ் வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் கூறினர்.
பிரபாகர் குறிப்பிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதில் சித்து, வடேகர் ஆகியோரிடம் ஏற்கெனவேவிசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications