Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேட்ச் பிக்ஸிங்: அஜய் சர்மாவுக்காகக் காத்திருக்கிறது சிபிஐ

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய வீரர்கள் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் மத்தியு புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), முன்னாள் இந்தியகிரிக்கெட் வீரர் அஜய் சர்மாவிடம் விசாரிக்க உள்ளது.

தற்போது லண்டனில் உள்ள அவருக்கு இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பியவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும்என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான கபில் தேவ் மீதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் உலகையே அந்த குற்றச்சாட்டுகள் பெரிய புயலைக்கிளப்பியுள்ளது.

தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் பிரபாகர் தெரிவித்தார். மேலும், தனது குற்றச்சாட்டுகளுக்குஆதரவாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் எடுக்கப்பட்ட பேட்டியின் வீடியோ ஆதாரத்தையும் அவர் வைத்துள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் சிபிஐயிடம் அந்த வீடியோ ஆதாரத்தைத் தரவுள்ளதாக பிரபாகர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் அஜய் சர்மா ஈடுபட்டுள்ளது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம்மேலும் விசாரணை நடத்தினால் இவ் வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் கூறினர்.

பிரபாகர் குறிப்பிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதில் சித்து, வடேகர் ஆகியோரிடம் ஏற்கெனவேவிசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+