For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தமிழகத்தில் 2 விபத்துகளில் 14 பேர் பலி
சென்னை:
தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்த 2 சாலை விபத்துக்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். 71 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்துக்கள் குறித்த விபரம் வருமாறு:
கரூர் அருகே இரண்டு அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 5பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர்.
மற்றொரு விபத்தில் ஈரோடு மாவட்டம் உதயூர் போலீஸ் நிலையம் அருகே தனியார் பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் சம்பவஇடத்திலேயே கொல்லப்பட்டார்கள். 11 பேர் படுகாயமடைந்தார்கள்.
வேன் பழனியிலிருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 29, 2000, 5:30 [IST]