தமிழகத்தில் இன்று
நஷ்-டத்-தில் மூழ்-கும் து-றை-மு-கங்-கள்
டெல்லி:
நாட்டில் உள்ள பெரும்பாலான போர்ட் டிரஸ்டுகள் கடுமையான நஷ்டத்தில்இயங்குவதாக சமீபத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கைக் குழு (சி.ஏ.ஜி) அறிக்கை விவரம்:
நாட்டில் உள்ள பல போர்ட் டிரஸ்டுகள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன. இதற்குநிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம்.
தரைவழிப் போக்குவரத்துத் துறையின் உத்தரவின்படி, தவறான முறையில் குரூட்ஆயில் ஏற்றிச் செல்லும் சிறிய கப்பல்களைப் பழுதுபார்த்ததன் மூலம் கல்கத்தா போர்ட்டிரஸ்டுக்கு ரூ.11.40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், பழுதுபார்க்கும் இடத்தில்உள்ள கிரேன்களைப் பழுதுபார்க்காமல் இருந்தது மற்றும் சரியான முறையில் கட்டணம்வசூலிக்காமல் இருந்தது போன்ற காரணங்களால் கல்கத்தா போர்ட் டிரஸ்டுக்கு ரூ.2.87வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை போர்ட் டிரஸ்டில், கிரேன்களை வாடகைக்கு எடுத்தது மூலம் பெரும் நஷ்டம்ஏற்பட்டுள்ளது. கிரேன்களை விலை கொடுத்து வாங்கியிருந்தால் அது வாடகையைவிட குறைவாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மீன்பிடிதுறைமுகத்தில் மின் பகிர்மான முறையில் ஏற்பட்ட குளறுபடியால் போர்ட் டிரஸ்டுக்குதேவையில்லாமல் ரூ.51 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தவறான மின்கட்டணத்தால் ரூ.96 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர்ட் டிரஸ்டுக்குள்வாடகைக்குப் பயன்படுத்தும் இயந்திரங்களின் கட்டணத்தை மறு ஆய்வுசெய்யாததால் கூடுதலாக ரூ.32 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொச்சி போர்ட் டிரஸ்டின் நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் ரூ.6.57 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை போர்ட் டிரஸ்டில் புதிதாகப் பதிக்கப்பட்ட பைப் லைன்கள் மீது பெயின்ட்அடிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தவறான முடிவால் மொத்தம் ரூ.3.11 கோடிநஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவன கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்த முறையான கட்டணம்வசூலிக்கப்படாததால், தூத்துக்குடி போர்ட் டிரஸ்டுக்கு ரூ.1.84 கோடி இழப்புஏற்பட்டுள்ளது.
இது தவிர மங்களூர் போர்ட் டிரஸ்ட், பாராதீப் போர்ட் டிரஸ்ட், விசாகப்பட்டினம்போர்ட் டிரஸ்ட் ஆகியவற்றிலும் மோசமான நிர்வாகத்தால் பல கோடி ரூபாய்க்குநஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தணிக்கைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications