உலக செஸ் சாம்பியன் பட்டம்: காஸ்பரோவ்-ஆனந்த் மோதுகின்றனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக உலகின் முதல் நிலை வீரரும், தற்போதைய உலக சாம்பியனுமானரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் மற்றும் உலகின் இரண்டாம் நிலை வீரரும், இரு முறை செஸ் ஆஸ்கார் விருதுபெற்றவருமான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இருவரும் மோதுகின்றனர்.
அடுத்த ஆண்டு இப் போட்டி நடைபெறும் என்றும், இது தொடர்பான ஒப்பந்தத்தில் காஸ்பரோவும், ஆனந்தும்கையெழுத்திட்டுள்ளதாகவும், ஆனந்துக்கு ஸ்பான்சர் செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
16 சுற்றுகள் கொண்டதாக இப் போட்டி நடைபெறும். இருவரும் சம புள்ளிகள் பெற்றிருந்தால் உலக சாம்பியன்பட்டத்தை காஸ்பரோவ் தக்க வைத்துக் கொள்வார். இப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.13 கோடியாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications