தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சூன்யக்காரிகள் என்-று கூறி 4 பெண்கள் படுகொலை

குவஹாத்தி:

அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் பில்லி சூன்யம் வைத்து விட்டதாகக் கூறி நான்கு பெண்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நான்கு பெண்களும், இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் கூட கிராமத்தவர்கள் யாரும்போலீஸாரிடம் சொல்லாததால், புதன்கிழமைதான் தெரிய வந்தது.

கொல்லப்பட்ட நால்வரின் உடல்களும் ஜோனாகோவன் என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீஸார் தோண்டி எடுத்தனர்.

நான்கு பெண்களும், கூரிய ஆயுதங்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் தண்டிக்கப்படுவீர்கள் என்று கொலையாளிகள்மிரட்டியதால், கிராமத்தினர் சொல்ல பயந்து விட்டுவிட்டனர். கொலைச் சம்பவம் தொடர்பாக கிராமத் தலையாரி உள்பட 18 பேரை போலீஸார்கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில், இதே போல, 50 வயதான குவாரியா பாய் என்ற பெண்மணி இதே காரணத்திற்காக கொல்லப்பட்டுள்ளார். முல்கானிகிராமத்தைச் சேர்ந்த, ஹரிராம் யாதவ் என்பவரின் மனைவியும், அவரது தங்கையும் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு குவாரியா பாய்தான் பில்லி சூன்யம் வைத்து விட்டதாக யாதவ் சந்தேகப்பட்டார். இதையடுத்து அவரைக் கொன்று விட்டுத்தலைமறைவாகி விட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+