தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஜம்முவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 24 பேர் பலி

ஜம்மு:

பஸ் தாறுமாறாய் ஓடி சாலையோரத்தில் இருந்த 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 30 பேர்படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து ஜம்முவில் தோடா மாவட்டத்தில் பாட்யாஸ் பகுதியிலுள்ள தாத்ரி என்ற இடத்தில் திங்கள்கிழமை நடந்தது.

தாத்ரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் பஸ் திரும்பியபோது, பஸ் தாறுமாறாக ஓடியது. டிரைவர் பஸ்சைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்த போதுஎதிர்பாராத வகையில் அருகிலிருந்த 200 அடி பள்ளத்தில் விழுந்தது.

உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ற இறந்தோரின் சடலங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 30பேரும் தோடா மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+